பூமியின் மேற்பகுதியை துல்லியமாக படம் பிடிக்கும் அதிநவீன ரேடாரை உருவாக்கி இஸ்ரோ சாதனை

பூமியின் மேற்பகுதியை துல்லியமாக படம் பிடிக்கும் அதிநவீன ரேடாரை உருவாக்கி இஸ்ரோ சாதனை
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பூமியின் மேற்பகுதியை மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உள்ள, 'எஸ்.ஏ.ஆர்., ரேடார்' சாதனத்தை தயாரித்துள்ளது.
இந்த ரேடாரை நாசாவுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக இஸ்ரோ தலைவர் சிவன்பங்கேற்றார். இந்த ரேடார் சாதனத்தை, நாசா, அதன் ரேடார் சாதனத்துடன் பொருத்தி, மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பும். இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ராக்கெட் வாயிலாக, நிசார் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும்.
இதில், அறிவியல் சார்ந்த தகவல்களை சேகரிப்பதற்காக முதன் முறையாக, வெவ்வேறு அலைவரிசை திறன் உள்ள, 'எல் பேண்டு மற்றும் எஸ் பேண்டு' ரேடார்கள் பொருத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments