50 சதவிகிதத்திற்கும் மேல் இட ஒதுக்கீட்டை பின்பற்றலாமா?அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

50 சதவிகிதத்திற்கும் மேல் இட ஒதுக்கீட்டை பின்பற்றலாமா என்பது குறித்து பதிலளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
50 சதவிகிதத்திற்கும் மேல் இட ஒதுக்கீட்டை பின்பற்றலாமா என்பது குறித்து பதிலளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே 52 சதவிகித இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய பாஜக அரசு மசோதா கொண்டுவந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசுகளின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள விரும்புவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீட்டை பின்பற்றலாமா என்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் வருகின்ற 15-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Comments