தமிழகத்தில் 543 பேருக்கு கொரோனா பாதிப்பு : 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து, மேலும் 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில், பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 562 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை பெருநகரில், 225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவர் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
Comments