தமிழ்நாட்டில் கணிசமாக குறையும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கணிசமாக குறையும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 460 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் மட்டும் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகரில், 120 பேருக்கு, புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
25 மாவட்டங்களில் 10 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, அனைத்து மாவட்டங்களிலும், வைரஸ் தொற்று பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.
Comments