தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
20,21,22 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments