கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளது அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்

தமிழகத்தில் மேலும் 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் மேலும் 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 470 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகரில், 138 பேருக்கு, புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
24 மாவட்டங்களில் 10 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகியவை ,வைரஸ் தொற்று இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது.
Comments