வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் வறண்ட வானிலேயே நிலவும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வருகிற 19-ம் தேதி கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
20, 21 ஆகிய தேதிகளில், தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
Comments