ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மதுபானம் ஓடுகிறது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை

பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான வழக்கில் பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்பு பகுதி அருகே வைப்பதற்கு மதுபானக்கடைகள் ஒன்றும் புத்தக கடையோ, மளிகை கடையோ இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மதுவிற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மதுபான விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தமிழக அரசு, மக்கள் நலனுக்கான பொது சுகாதாரத்திற்காக 90 ஆயிரம் கோடி செலவிடுகிறது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
ஆனால், நீதிமன்றத்தின் இந்த யோசனைகளை தமிழக அரசு உற்றுநோக்கி கவனிக்குமா? என்ற கேள்வியை எழுப்பி வழக்கை முடித்து வைத்தனர்.
Comments