இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய வகை டிரோன் ஏப்ரலில் பரிசோதனை என எதிர்பார்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய வகை டிரோன் ஏப்ரலில் பரிசோதனை என எதிர்பார்பு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய வகை டிரோன் பரிசோதனை ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் இருந்து டிரோன்களை இந்தியா வாங்கி வரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தியில் டிரோன்களை வடிவமைக்கும் முயற்சியில் டி.ஆர்.டி.ஓ என்ற ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.
அதன்படி வடிவமைக்கப்பட்ட ‘ரஸ்தோம் - 2’ என்ற டிரோனின் இறுதிகட்ட சோதனை 16000 அடி உயரத்தில்,கடந்தாண்டு நடைபெற்றது.
அடுத்துகட்டமாக 27000 அடி உயரத்தில் 18 மணி நேரம் இயக்கப்படவுள்ள நிலையில், அதற்கான பரிசோதனை, கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments