தமிழ்நாட்டில் முற்றாக குறைந்துவரும் கொரோனா: 25 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை

தமிழ்நாட்டில், மேலும், 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 482 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், 149 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Comments