சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகக் கூறியுள்ள பிரதமர், இந்த வேதனையான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்குவவதாகக் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என விழைவு தெரிவித்துள்ள பிரதமர், சம்பவம் நடந்த பகுதியில் அதிகாரிகள் தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.
Comments