விவசாயி பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம்: முதலமைச்சர் அறிவிப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாய பயன்பாட்டு பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி,
பயிர்க்கடன் ரத்து உள்ளிட்ட விவசாயிகள் நலனுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதை சுட்டிக்காட்டினார். அதன் தொடர்ச்சியாக, விவசாய பம்பு செட்டுகளுக்கு 24மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
பல்லடத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேடை போட்டு, மைக் பிடித்து நேருக்கு நேர் வந்து குற்றச்சாட்டு வைத்தால், மு.க.ஸ்டாலினுக்கு தான் பதில் சொல்ல தயாராக உள்ளதாக கூறினார்.
முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வந்ததால், அதற்கு வழிவிட்டு நிற்குமாறு தொண்டர்களை அறிவுறுத்திய முதலமைச்சர், ஆம்புலன்ஸ் சென்ற பிறகு மீண்டும் உரையைத் தொடர்ந்தார்.
மகளிர் சுய உதவி குழுவினரின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சருக்கு, நடனமாடி வரவேற்பு அளிக்கப்பட்டது.
Comments