தமிழகத்தில் பெருமளவில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில், மேலும், 481 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 490 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் நலம் அடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 26 ஆயிரத்து 994 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி, 6 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், 146 பேருக்கு புதிதாக, தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை என கூறியுள்ள சுகாதாரத்துறை, 24 மாவட்டங்களில், தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.
Comments