கஞ்சா மற்றும் மது அருந்த பணம் கேட்டு நச்சரித்த மகன்... ஆத்திரத்தில் கொலை செய்த தந்தை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கஞ்சா மற்றும் மது அருந்த பணம் கேட்டு நச்சரித்த மகனை, கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார்.
மாப்பு சாலையில் உள்ள சந்தையில் காய்கறி வியாபாரம் செய்த பழனி என்பவரது மகனான கோகுல், மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவற்றை வாங்குவதற்காக பணம் கேட்டு நச்சரித்த கோகுலை, பழனி கண்டித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பழனி, அங்கிருந்த கத்தியால் குத்தியும், கல்லால் முகத்தை சிதைத்தும் கோகுலை கொலை செய்துள்ளார். பின்னர் தானே நேரடியாகச் சென்று காவல் நிலையத்தில் அவர் சரணடைந்திருக்கிறார்.
Comments