மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற மத்திய அரசு உறுதி - பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
டோபியிலிருந்து துர்க்காபூர் வரை 348 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் கட்டிய இயற்கை எரிவாயு குழாய் உள்ளிட்ட 4 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது பேசிய அவர், வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் மேற்கு வங்கத்தை மையமாக மாற்ற முயற்சி எடுத்துள்ளதாகக் கூறிய அவர், இதில் ஹால்டியா நகரம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் ரயில், சாலை, விமான நிலையம் மற்றும் துறைமுக இணைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஹைட்ரஜனை சுத்தமான எரிபொருளாக பெறுவதற்காக பணியைத் தொடங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments