முக்கிய உளவுத் தகவல்களை டிரம்புக்கு வழங்கக் கூடாது - அதிபர் பைடன்

முன்னாள் அதிபர் என்ற வகையில், உளவுத்துறை தகவல்கள் டிரம்புக்கு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
முன்னாள் அதிபர் என்ற வகையில், உளவுத்துறை தகவல்கள் டிரம்புக்கு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசு நிர்வாகத்தில் மிகமுக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் அதிபர்களுக்கு தெரிவிக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் தாறுமாறாக நடந்துகொள்ளும் டிரம்புக்கு அது தேவையில்லை என தான் நினைப்பதாகக் கூறியுள்ள ஜோ பைடன், அவருக்கு எந்த மதிப்பீட்டின் உளவுத்தகவல்களை தெரிவிப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டிரம்புக்கு தெரிவித்தால், உளவுத் தகவல்களை வெளியே கசியவிட்டு, அதுபற்றி ஏதாவது கமென்ட் அடிப்பதைத் தவிர, வேறு என்ன பலன் விளையப் போகிறது என்றும் தனியார் தொலைக்காட்சி பேட்டியில் ஜோ பைடன் கூறியுள்ளார்.
Comments