துருக்கியில் திடீரென தோன்றிய மர்ம உலோகப் பொருள்..!

துருக்கியில் திடீரென தோன்றிய மர்ம உலோகப் பொருள்..!
துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணமான Sanliurfa ல் 3மீட்டர் உயரமுள்ள மர்ம உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில் பகுதியான Gobeklitepeல் இந்த உலோகத் தகடு நிறுவப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் அங்கு அதிகளவு கூடியதை அடுத்து பாதுகாப்புக்காக வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் தென்பட்ட இந்த மர்ம உலோகப் பொருள் அதன் பின்னர் உலகின் பல்வேறு நாடுகளிலும் திடீரென தோன்றியது.
தற்போது தென்பட்டுள்ள இந்த உலோகப் பொருளில் சந்திரனை காண வேண்டுமானால் வானத்தை பாருங்கள் என்ற சொற்றொடர் எழுதப்பட்டுள்ளது.
Comments