தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வருகிற 9 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்றும், அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் காலை நேரத்தில் லேசான பனி மூட்டம் காணப்படுமென கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகிற 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments