தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட விவகாரம் ; மாநிலங்களவையில் தமிழகத்தின் திமுக அதிமுக எம்பிக்கள் கடும் கண்டனம்

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழக்க காரணமாக இருந்ததற்காக நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழக்க காரணமாக இருந்ததற்காக நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் சமீபத்தில் தமிழக மீனவர்கள் படகில் கப்பலை மோதி 4 பேரை கொன்றது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தை சேர்ந்த 245 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அதிமுக எம்பி தம்பிதுரை சுட்டிக் காட்டினார்.
தமிழக எம்பிக்களுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அரசிடம் கடுமையான கண்டனத்தை இந்தியா பதிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்
Comments