தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் காலை நேரத்தில் லேசான பனி மூட்டம் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரத்தில் லேசான பனி மூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments