கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக, 15 கோடி அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கும் கூகுள் நிறுவனம்

கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை குடிமக்களுக்கு ஏற்படுத்த 15 கோடி அமெரிக்க டாலர் நிதியினை கூகுள் நிறுவனம் ஒதுக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பேசிய அவர், தடுப்பு மருந்துகள் எங்கு, எப்போது கிடைக்கின்றன என்று உலக மக்களுக்கு அறிவுறுத்த கூகுள் நிறுவனம் உதவத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
கிராமப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சுந்தர்பிச்சை தெரிவித்தார்.
Comments