கொரோனா சூழலில் தேர்தலை நடத்தியதற்கு ஆணையத்துக்குப் பாராட்டு -குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

கொரோனா சூழலிலும் வெற்றிகரமாகத் தேர்தல்களை நடத்தியுள்ளது நமது ஜனநாயகத்தின் சாதனை எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழலிலும் வெற்றிகரமாகத் தேர்தல்களை நடத்தியுள்ளது நமது ஜனநாயகத்தின் சாதனை எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
தேசிய வாக்காளர் நாளையொட்டிக் காணொலியில் உரையாற்றிய அவர், கொரோனா சூழலிலும் பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலைப் பாதுகாப்பாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
ஹலோ ஓட்டர்ஸ் என்னும் பெயரில் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டுள்ள இணையத்தள வானொலி சேவையையும் தொடங்கி வைத்தார்.
முதன்முறை வாக்காளர்களாகும் இளைஞர்கள் தவறாமல் வாக்களித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Comments