முதலமைச்சர் வரவேற்புக்காக சாலையின் இருபுறத்திலும் வைக்கப்பட்டிருந்த செங்கரும்புகள்: அவர் சென்றதும் போட்டி போட்டு கரும்புகளை எடுத்துச் சென்ற மக்கள்

கோவை பீளமேட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க சாலையின் இருமருங்கிலும் வைக்கப்பட்டிருந்த கரும்புகளை அங்கு வந்த மக்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுக்க முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பீளமேடு ரொட்டி கடை மைதானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்திருந்தார். அவரை வரவேற்பதற்காக சாலையின் இருமருங்கிலும் செங்கரும்புகள், இளநீர், வாழைமரங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு அலங்காரம் செய்திருந்தனர்.
முதலமைச்சர் பேசி முடித்துச் சென்றதும் அங்கிருந்த கரும்புகளை போட்டி போட்டுக்கொண்டு மக்கள் எடுத்துச் சென்றனர். இதனால் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Comments