தமிழகம் முழுவதும் அனுமன் ஜெயந்தி கோலாகலம்..!

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திரளான பக்தர்கள் அனுமனை தரிசனம் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம் மலைமேல் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் அனுமனை தரிசித்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அண்ணா நகரில் அமைந்துள்ள ராமர் ஆலயத்தில் உள்ள அஞ்சலி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருவாரூர்:
திருவாரூர் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று அனுமனை வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி:
ஓசூரில் ஆஞ்சநேயர்,அனுமந்தன்,அனுமந்தராய சுவாமி என்னும் பல பெயர்களில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
Comments