கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக்கு சர்வதேச குழுவை அனுமதிக்க தயார் - சீன அரசு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்யவுள்ள சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்க தயார் என சீன அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்யவுள்ள சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்க தயார் என சீன அரசு தெரிவித்துள்ளது.
வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்தது. ஆனாஙல் சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், சர்வதேச நிபுணர் குழுவை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
நிபுணர் குழுவை வுகான் நகருக்கு வரவேற்க தயாராக இருப்பதாகவும், குழுவினர் எப்போது வருவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.
Comments