தாம்பரத்தில் மின்சார ரயிலில் தூங்கிய பெண் பாலியல் பலாத்காரம்..! தற்காலிக ரயில்வே ஊழியர்கள் 2 பேர் கைது

சென்னையை அடுத்த தாம்பரத்தில் மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தற்காலிக ரயில்வே ஊழியர்கள் 2பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தற்காலிக ரயில்வே ஊழியர்கள் 2பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் நேற்றிரவு வீடு திரும்புவதற்காக பல்லாவரத்தில் இருந்து மின்சார ரயிலில் ஏறியுள்ளார்.
மது போதையில் இருந்ததால் ரயிலில் ஏறிய உடனேயே தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தாம்பரம் பராமரிப்பு நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
அப்போது ரயிலை சுத்தம் செய்ய வந்த தற்காலிக ஊழியர்களான சுரேஷ் மற்றும் அப்துல் அஜிஸ் ஆகியோர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments