4 மாதங்களுக்கு கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி இலவச டேட்டா.. முதலமைச்சர் உத்தரவு.!

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வரும் ஏப்ரல் வரை நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா - விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க உத்தரவு
இணைய வழி வகுப்புகளில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொள்வதற்கு வசதியாக, 4 மாதங்களுக்கு நாள்தோறும் 2ஜிபி இலவச டேட்டா வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களுக்கு நாள்தோறும் 2ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
எல்காட் நிறுவனத்தின் மூலமாக, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா பெற்றிடும் வகையில் விலையில்லா டேட்டா கார்டுகளை வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இணைய வழி வகுப்புகளுக்காக வழங்கப்படும் இலவச டேட்டா கார்டுகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள மாணாக்கர்களை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments