நாடாளுமன்ற கலவரம் ஒரு சதிவேலை - அதிபர் டிரம்ப்

நாடாளுமன்ற கலவரம் ஒரு சதிவேலை - அதிபர் டிரம்ப்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு சதித் திட்டமே காரணம் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால், வன்முறை நடப்பதற்கு முன்னர் வெள்ளை மாளிகையின் வெளியே தனது ஆதரவாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தை நோக்கி செல்லுமாறு தூண்டினார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து துணை அதிபர் பென்ஸ் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் இடையூறு செய்யுமாறும் டிரம்ப் தூண்டினார் எனவும் புகார்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் பிரிட்டிஷ் படைகள் 1814 ல் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தீ வைத்ததை தவிர்த்து பார்த்தால், இதுவே அங்கு நடக்கும் முதலாவது தாக்குதலாகும். நாடாளுமன்ற கலவரத்தை தொடர்ந்து அது அமைந்துள்ள வாஷிங்டன் டிசியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments