தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,வருகிற 8 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வருகிற 9 ஆம் தேதி வடக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 ஆம் தேதி அன்று தமிழகத்தின் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments