வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் இன்று முதல் 3 நாள் சுற்றுப் பயணம்

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் இன்று முதல் 3 நாள் சுற்றுப் பயணம்
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முதல் மூன்று நாட்கள் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அழைப்பின் பேரில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டிற்குச் செல்கிறார். மூன்று நாட்கள் இலங்கையில் இருக்கும் அவர் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்களுடன் பேச்சு நடத்த உள்ளார்.
அப்போது இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.
Comments