தமிழகத்தில் ஒரே நாளில் 1,002 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் ஒரே நாளில் 1,002 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 867 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஆயிரத்து 2 பேர், பாதிப்பிலிருந்து நலமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் 236 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இல்லாத மாவட்டங்களாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாறியுள்ளன. 13 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவானதாக தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, 31 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை என தெரிவித்துள்ளது.
Comments