தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 910 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஆயிரத்து 7 பேர், பாதிப்பிலிருந்து நலமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு ஒரே நாளில் 11 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் 246 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்ஆகிய 3 மாவட்டங்கள், கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.
11 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவானதாக தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, 32 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை என தெரிவித்துள்ளது.
Comments