2020ம் ஆண்டில் வங்கி மோசடி தொடர்பாக 190 வழக்குகள் பதிவு - சிபிஐ

கடந்த 2020 ஆண்டில் வங்கி மோசடி தொடர்பாக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சிபிஐ 190 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இதில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. 12 நிறுவனங்களும் அதன் தலைவர்களும் தலா ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் தான் பெரும்பாலான வழக்குகள் பதிவாகியுள்ள போதும் சென்னையில் வங்கி கடன் மோசடி தொடர்பாக 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Comments