இந்தியாவில் உருமாற்றம் பெற்ற வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

இந்தியாவில் உருமாற்றம் பெற்ற வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு
உருமாற்றம் பெற்ற வீரியமிக்க கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வகை கொரோனா வைரஸ் முந்தைய தொற்றைவிட 70 விழுக்காடு அதிக வேகத்தில் பரவும் எனக் கூறப்படுகிறது. புதுவகைத் தொற்று பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோரை விமான நிலையங்களிலேயே சோதித்துத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று இந்தியாவில் 20 பேருக்கு இருந்தது ஏற்கெனவே கண்டறியப்பட்டது. இந்நிலையில் மேலும் 5 பேருக்கு அவ்வகைத் தொற்று உள்ளது புனே, டெல்லி ஆய்வகங்கள் மாதிரிகளை ஆய்வு செய்த பின் வெளியிட்ட முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
Comments