புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு- குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு- குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஜூன் 30-ஆம் தேதி காணாமல் போன சிறுமி, அங்கு உள்ள குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடற்கூறு ஆய்வில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது.
விசாரணையில் பூ வியாபாரம் செய்து வரும் ராஜா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியா குற்றவாளி சாமுவேல் என்ற ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Comments