"குரோசியாவின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்" ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் சேதம்

குரோசியாவின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்... ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் சேதம்
குரோசியா நாட்டின் மத்திய பகுதியில் நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
தலைநகர் ஜாக்ரேப்புக்கு தென்கிழக்கே உள்ள பகுதியை மையமாக கொண்டு நேற்று ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளியாக நிலநடுக்கம் நேரிட்டுள்ளது.
தலைநகர் வரை உணரப்பட்ட இந்நிலநடுக்கத்தால் அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. ஏராளமான வீடுகளின் கூரைகள் பெயர்ந்து விழுந்ததோடு, சுவர்களிலும் விரிசல்கள் ஏற்பட்டன.
வீடுகளின் ஜன்னல்கள், வீடுகள் உள்ளே இருந்த பொருள்கள் உடைந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை.
கடந்த மார்ச் மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments