முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றால்தான் கூட்டணி - அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால்தான் கூட்டணி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கைத் திறந்து வைத்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதன்பின் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் கூட்டணிகள் உறுதி செய்யப்படும் அதன் பிறகுதான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் அந்த வகையில் தற்போது பல பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைத்த கூட்டணி நீடிப்பதாக தெரிவித்தார்.
மேலும் கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த பிறகு தான் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் கட்சியின் பொதுக்கூட்டம் என கூறினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால்தான் அவர்களுடன் கூட்டணி என தெரிவித்தார்.
Comments