மத்திய அரசுடன் வருகிற 29 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்த தயார் - விவசாயிகள்

மத்திய அரசுடன் வருகிற 29 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
மத்திய அரசுடன் வருகிற 29 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 31 வது நாளாக டெல்லியின் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், வருகிற 29 ஆம் தேதி காலை 11 மணி அளவில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறினார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது, உணவு தானியங்களுக்காக அடிப்படை ஆதாரவிலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தருவது என்ற இரண்டு அம்சங்களை முன்னிருத்தி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Comments