தனியார் விடுதியில் விஷம் குடித்து ஆயுதப்படை காவலர் தற்கொலை

சென்னை பெரியமேட்டில் தனியார் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட ஆயுதப்படை காவலர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ், புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 16ஆம் தேதி முதல் பணிக்கு வராமல் இருந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி முதல் பெரியமேட்டில் Jeyam Residency என்ற தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.
துர்நாற்றம் வீசிய தகவல் அறிந்து காவலர்கள் கதவை உடைத்து பார்த்தபோது சுரேஷ் இறந்த நிலையில் கிடந்துள்ளார். தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என அவர் கடிதம் எழுதிவைத்துள்ளார்.
Comments