தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது, பெரம்பலூர்

தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது, பெரம்பலூர்
தமிழ்நாட்டில், புதிதாக 1,035 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் 1,120 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பால் 12 பேர் உயிரிழந்தனர்.
31 மாவட்டங்களில் கொரோனா பலி பதிவாகவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் 2- வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
சென்னையில் 296 பேர், புதிதாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 217 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments