கர்நாடகத்தில் அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு வாபஸ்

கர்நாடக மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் முன்பே வாபஸ்
கர்நாடக மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் முன்பே வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக மாநிலத்தில் இன்று முதல், இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பை கர்நாடக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
தொழில்நட்ப ஆலோசனைக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Comments