இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைத் தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைத் தாண்டியது
இந்தியாவில் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் ஏறத்தாழ 27 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று உறுதியானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதுவரை 95 லட்சத்து 50 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில் 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 340 பேர் பெருந்தொற்றினால் உயிரிழந்ததைத் தொடர்ந்து இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணித்துள்ளனர்.
உலக அளவில் பெருந்தொற்று பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2ம் இடத்தில் இருந்து வருகிறது.
Comments