நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்கள் 344 பேர் மீட்பு

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்கள் 344 பேர் மீட்பு
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 344 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கட்சினா மாகாணம் கங்கரா என்ற இடத்தில் உள்ள அரசு ஆண்கள் பள்ளிக்கூடத்திற்கு சில தினங்களுக்கு முன் துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள் மாணவர்கள் 450 பேரை கடத்தி சென்றனர்.
கடத்தி செல்லப்பட்ட குழந்தைகளை தேடும் பணியில் போலீசாரும், ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டனர்.
சம்பரா மாகாணத்தில் உள்ள ருகு காட்டுப்பகுதியில் மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக, காட்டுப்பகுதியை சுற்றி வளைத்த நைஜீரிய பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளில் பிடியில் இருந்த 344 மாணவர்களை மீட்டனர்.
Comments