தமிழக கொரோனா நிலவரம்: 9 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவான பாதிப்பு எண்ணிக்கை

தமிழ்நாட்டில், புதிதாக 1,132 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் 1,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பால் 10 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் 359 பேருக்கு, புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 9 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.
செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, காஞ்சிபுரத்தில், தொற்று பாதிப்பு நன்றாக குறைந்து, இரட்டை இலக்கத்திற்கு மாறியுள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில், 9 ஆயிரத்து 951 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments