புயலின் நிலையை உணர்ந்து செயல்பட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

புயலின் நிலையை உணர்ந்து செயல்பட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
புயலின் நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார்.
வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள புயல் சின்னம், அதனால் தென்மாவட்டங்களில் பெய்யப்போகும் கனமழை உள்ளிட்டவை குறித்து தலைமைச் செயலகத்தில் அவர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புயல் ஏற்பட்டாலும், அரசாங்கம் சரியான வழிவகைகளை பின்பற்றி மக்களை பாதுகாத்து வருகிறது என்று அப்போது முதலமைச்சர் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், முக்கிய துறைகளின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Comments