சென்னையில் புறநகர் ரயில்கள் நாளை முதல் இயங்கும்

சென்னையில் புறநகர் ரயில்கள் நாளை முதல் இயங்கும்
வெள்ளிக்கிழமை முதல் வழக்கம் போல் சென்னையில் அத்தியாவசியப் பணியாளர்களுக்காக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை புதன்கிழமை நிறுத்தப்பட்டது. புயல் கரை கடந்ததை அடுத்து பிற்பகல் 3 முதல் 8 மணி வரை சென்னை - கும்மிடிப்பூண்டி, சென்னை - அரக்கோணம், கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வழக்கம் போல் அத்திவாசியப் பணியாளர்களுக்கான ரயில்கள் அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
Comments