இருசக்கர வாகன ஓட்டிகளை அலற விட்ட ஒற்றை காட்டு யானை..!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சுற்றுலாப்பயணிகளை ஒற்றை காட்டு யானை துரத்தும் காட்சி வெளியாகி உள்ளது.
தமிழக-கர்நாடக எல்லையில் உதகை அருகே உள்ள பந்திப்பூர் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் சிலர் இருசக்கர வாகனங்களில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் ஒற்றை யானை நிற்பதை கண்டு உடனடியாக இருசக்கர வாகனங்களை திருப்பிய நிலையில், அவர்களை யானை சிறிது தூரம் வரை துரத்திச் சென்றது.
யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை வழியில் நிறுத்த வேண்டாம் என்றும், யானைகளுடன் செல்பி எடுக்கவோ, அருகில் செல்வோ கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Comments