அடுத்த மூன்று நாட்களில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழையும், பரவலாக அனைத்து மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை நீடிக்குமென கூறப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த மூன்று நாட்களில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை,கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர்,தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments