சீனாவில் 7-வது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

சீனாவில் தேசிய அளவிலான 7ஆவது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சீனாவில் தேசிய அளவிலான 7ஆவது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை சீனா நடத்தி வருகிறது. கடைசியாக 2010ம் ஆண்டு நடத்தப்பட்ட 6ஆவது கணக்கெடுப்பு புள்ளி விவரம், அந்நாட்டில் 137 கோடி பேர் (1.37 billion)வாழ்வதாக தெரிவித்தது.
இந்நிலையில் 7வது கணக்கெடுக்கும் பணியை 70 லட்சம் பேர் மூலம் சீன அரசு இன்று தொடங்கியுள்ளது. அவர்கள் அனைவரும் தனித்தனியே ஒவ்வொரு வீடாக சென்று, தனிநபரின் பெயர், அடையாள எண், பாலினம், திருமண விவரம், கல்வி, வேலை குறித்த விவரத்தை சேகரிக்கின்றனர்.
Comments