இந்தியாவின் ரயில் திட்டங்களுக்கு என்.டி.பி வங்கி நிதி உதவி

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இரண்டு ரயில் திட்டங்களுக்கு, 'பிரிக்ஸ்' அமைப்பின், புதிய வளர்ச்சி வங்கி, 5,466 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க உள்ளது.
இது தொடர்பாக, அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பில், மும்பையின் மேற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளை இணைக்கும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 1,778 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத், மீரட்டை இணைக்கும் பறக்கும் ரயில் திட்டத்துக்கு, 3,688 கோடி ரூபாய் கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டது, என்.டி.பி., எனப்படும் புதிய வளர்ச்சி வங்கி.
Comments